கிளிநொச்சியில் ரயில் கடவையை கடக்க முயன்றவர் விபத்தில்உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில்பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிபயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னழகு அனுசன்ராஜ்என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த ரயில் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் யாழ்.நோக்கி பயணத்தைஆரம்பித்தது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.