காரைநகரில் மாபெரும் நடமாடும் சேவை இன்று

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைநகர் பிரதேசசபையின் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “வளமான நாடு – அழகான வாழ்க்கை – மறுமலர்ச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை (செப். 15) நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராஜா மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக பிரதேசசபை அறிவித்துள்ளது.

இந்நடமாடும் சேவையில், காரைநகர் மக்களுக்கு பல்வேறு துறைகளின் சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படவுள்ளன. இதில்,

  • பிரதேசசபையின் ஆதனபெயர் மாற்றம், கட்டட அனுமதி, வியாபார உரிமம்,

  • பிரதேச செயலகத்தின் பிறப்புச் சான்றிதழ், நலன்புரி நன்மைகள், வீட்டுத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள்,

  • சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், ஆயுள்வேத மருந்தகம், இலங்கை வங்கி, கமநல சேவைத்திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சேவைகள் அடங்கும்.

மேலும், அன்றைய தினம் இரத்ததான முகாமும் நடத்தப்படவுள்ளது என காரைநகர் பிரதேசசபை தெரிவித்துள்ளது.

Share this Article