கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த உத்தரதேவி ரயில் 5.17 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையம் அருகில் மாட்டுடன் மோதியதில் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட சேதத்தினால் ரயில் என்ஜின் சேதமுற்றுள்ளது.
இதையடுத்து நீண்ட நேரங்களின் பின்னர் அனுராதபுரத்தில் இருந்து 8.15 மணியளவில் மற்றொரு ரயில் என்ஜின் தாண்டிக்குளம் ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளதுடன் அங்கு பழுது பார்க்கப்பட்டு மீள யாழ்ப்பாணம் புறப்படவுள்ளது.