வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்லவேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டுவருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை தமிழ் மக்கள் அழமாக சிந்திக்கவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (ஏப்ரல்15) நடைபெற்ற ஊடக சந்திப்பில்இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் அனைத்தும்மேன்முறையீட்டு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை நடைமுறைக்குகொண்டுவரும் நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இதேநேரம் சொல்லளவில் அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர்அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின் உண்மையானஇயல்பையே காட்டுகின்றது. இதை இன்று நேரடியாகவே கண முடிகின்றது.
இதேவேளை ஏற்கனவே திறந்துவிடப்பட இருந்த வீதிகளையே இன்று யுத்தகாலத்தில் இருந்ததைவிட மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் திறந்துவிட்டுவாக்குக்காக நாடகமாடுகின்றனர்.
இதேநேரம் இதுவரை எந்தவொரு ஊழலையோ முறைகேடுகளையோகட்டுப்படுத்தவோ இல்லை. அதைவிட தேர்தல் கால நடைமுறை மீறல்களைதேர்தல் திணைக்களத்திடம் ஆதாரத்துடன் கூறிக் கூட கைது செய்யவில்லை.
அத்துடன் உள்ளூராட்சி மற்றங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாணசபைக்கே உள்ளது. அது மத்திய அரசுக்கானதல்ல.
இதேநேரம் மாகாண சபை என்பது பல இலட்சம் உயிர்களின் தியாகத்துக்குகிடைத்த சில உரிமைகளுள் ஒன்று. இதை மீண்டும் மத்திக்கு கொடுத்தால்இருப்பதையும் இழக்கும் நிலை மறுபடியும் தமிழருக்கு ஏற்படும்.
இதனிடையே பொதுத்தேர்தலில் யாழ்பாணத்திலிருந்து மத்திக்கு 3 பாராளுமன்றஉறுப்பினர்களை கொடுத்ததால் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள்தொடர்பில் தங்களே தீர்மானிப்போம் என்ற மமதையுடன் இன்று பேசுகின்றனர் .
இவ்வாறான நிலையில் இப்போதுள்ள அசியல் சாசனத்தில் இருக்கின்றகுழப்பங்களுக்கு தீர்வு காணவேண்டும் என கூதினார்கள், நாட்டுக்கு ஒரு புதியஅரசிதல் சாசனம் அவசிம் தேவை என்றார்கள்.
ஆனால் அதற்கான பலமிருந்தும் அதை இவர்கள் கொண்டுவருவார்கள் என்பதுசந்தேகம்.
இதேநேரம் சமஸ்டி எனக்கூறும் தமிழர் தரப்பிடமும் அதற்கான பொறிமுறைஇருப்பதாக தெரியவில்லை.
இதேநேரம் நாங்கள் மாகாணத்துக்கு இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களைமுழுமையாக நிறைவேற்றி அதன் பின்னர் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்என கூறுகின்றோம்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் எமக்கான வலுவான அதிகாரமாகும். இதைதமிழ் மக்கள் தமக்கானதாக உறுதி செய்வது அவசியம்.
இவ்வாறான பின்னணியில் NPP யின் பித்தலாட்டம் மக்களுக்குதெரியவந்துள்ளது.
இதேநேரம் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கா அல்லதுஇலங்கைக்கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பாக அமைச்சர் தரத்தில் சந்திரசேகரனின் சொற்பிரயோகங்கள் இருப்பதுஅவசியம். அவர் அதை நினைவில் கொள்ளாது செயற்படுவதும் கவனத்தில்கொள்வது அவசியம்.
ஒரு தரப்புக்கு ஒரு நியாயம் இன்னொரு தரப்புக்கு மற்றொரு நியயம் என தேர்தல்ஆணையகம் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சமமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.