உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (மே21) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடலின் போது ,
விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதையநிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கான தேவைப்பாடுகளும் உள்ளூர்உற்பத்திகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் ,
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில்விசேடமாக யாழ்ப்பாண கோட்டை மற்றும் பழைய கச்சேரியினை புனரமைத்துமரபுரிமை சுற்றுலா அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கானஅவசியத்தினையும்,
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதார அபிவிருத்திதொடர்பான கோரிக்கைகள்,
தெல்லிப்பளை காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாகபிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில்வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும்,
தனியார் துறைகளின் அபிவிருத்தி மூலம் இளைஞர் யுவதிகளுக்கானவேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் எனவும், அதற்கான தனியார் துறைகளின்முதலீடுகளுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும்,
பலாலி சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுகஅபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடலில் உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி விக்டர்அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிடமுகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ஸ்றீபன் மசீங், சர்வதேசநிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் ருக்சினா குணரட்ன மற்றும்இணைந்த செயற்பாட்டு அலுவலர் மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோா்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.