By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உருத்திரபுரீஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துக! – சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > உருத்திரபுரீஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துக! – சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்!
வன்னிச் செய்திகள்

உருத்திரபுரீஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துக! – சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்!

Last updated: 2023/05/13 at 10:17 PM
Published May 13, 2023 358 Views
Share
1 Min Read
SHARE

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள உருத்திரபுரம் உருத்திரபுரீசுவரர் ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஆலயத்தின் பழைமையையும், புனிதத்தன்மையையும் இயல்புகெடாது பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இன்றையதினம் (மே 13) அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

ஏற்கனவே 2021.03.22 ஆம் திகதி இவ் ஆலயத்தில் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முனைந்த தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளை, ஆலய நிருவாகத்தினரும், மக்களும் இணைந்து அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அதேவேளை கடந்த 2021.03.24 ஆம் திகதி இவ்விடயத்தை ஓர் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையாக நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பிரஸ்தாபித்திருந்தேன்.

அதன்பின்னர் 2023.05.11 ஆம் திகதி நடைபெற்ற தங்களுக்கும் எமக்கும் இடையிலான சந்திப்பின்போது தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தாங்கள் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக மீறுவதாகவும் இவ்வாலய விவகாரம் அமைந்துள்ளது.

இந்த நாட்டில் இன நல்லிணக்கம், மதப் பிரிவினையின்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தாங்கள்,  உருத்திரபுரீசுவரர் ஆலயத்தை அகழ்வு என்றபேரில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்தவும், தமிழர்களின் இன, மத, மொழி, மரபுரிமை அடையாளங்கள் மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு இக் கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் – என்றுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 2023.05.15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதியிடம் நேரில் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali May 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குமுதினிப் படுகொலை நினைவு தின அஞ்சலி பிரித்தானியாவில்!
Next Article கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?