உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு விவகாரம் -அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியீடு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான சட்டமூலம் குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி நேற்று (07/08) வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.

மேலும், பிரதம நீதியரசர், தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.

இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24ஆக உயர்த்தவும் கோருகிறது.

அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வெளியிடுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment