By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஈழத்தாயின் பாசப் போராட்டம் தோற்றது
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஈழத்தாயின் பாசப் போராட்டம் தோற்றது
இலங்கைச் செய்தி

ஈழத்தாயின் பாசப் போராட்டம் தோற்றது

Last updated: 2024/02/28 at 9:57 PM
Published February 28, 2024 260 Views
Share
2 Min Read
SHARE

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவர் சாந்தன். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சாந்தன். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சாந்தன் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாந்தன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சாந்தனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக சாந்தனின் உயிர் பிரிந்தது. இதனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. சாந்தன் மறைவை உறுதிப்படுத்தியுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாந்தன் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும் அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றபோது சாந்தன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பால் சாந்தன், சில சமயங்களில் சுயநினைவை இழந்து பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்த சாந்தனுக்கு நேற்று இரவு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சுயநினைவை இழந்தார் என்றும் தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து சி.பி.ஆர். சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அவரது தயார் மகேஸ்வரி கடந்த ஆண்டு இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து சாந்தன் நாடு திரும்ப மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. ஆனால், தாய் நாடு திரும்புவதற்கு முன்பே சாந்தனின் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR February 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வௌியான தகவல்
Next Article யாழ். பல்கலையில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?