ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு விழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வினை இன்று (ஜீலை 29) மிக சிறப்பாக மேற்கொண்டனர்

ஆடிப்பிறப்பு நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ.சி.சத்தியசோதி அவர்கள் தலைமையில் இடம் பெற்றது ஆடிப்பிறப்பு நிகழ்வின் விஷேடமாக ஆடிக்கூழ், ஆடிக்கொழுக்கட்டை என்பன அனைவரும் பகிந்துண்டதுடன், ஆடிப்பிறப்பு தொடர்பான கருத்துரையும் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது


தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டு விளையாட்டினையும் ஆடிப்pறப்பு நாளில் சந்தோசமாக மேற்கொண்டனர்

Share this Article