By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > அம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி
வன்னிச் செய்திகள்

அம்புலன்சில் வெடிபொருள்: 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதி பேட்டி

Last updated: 2023/03/20 at 9:24 PM
Published March 20, 2023 460 Views
Share
6 Min Read
SHARE

இலங்கையில் போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், போரின் பாதிப்புகள் இன்றும் காணப்படுகின்றன.

அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கினார் என்று கூறப்பட்டு, 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதியே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இறுதிக் கட்டப் போர் வலுப்பெற ஆரம்பித்த நிலையில், இவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியாக (ஓட்டுநராக) இவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு அவசரமாக மருந்துகளை எடுத்து வருவதற்காக, மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனமொன்றை எடுத்துக்கொண்டு செல்லையா சதீஸ்குமார் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார்.

எனினும், அவர் பயணித்த மருத்துவமனை வாகனத்தை வவுனியா பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு பிரிவு, அந்த வாகனத்திலிருந்து வெடிப் பொருட்களை எடுத்தது.

இதையடுத்து, செல்லையா சதீஸ்குமார் மீது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைக் கைது செய்திருந்தார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட செல்லையா சதீஸ்குமார் மீது சட்ட மாஅதிபர் குற்றப் பத்திரிகை தயார் செய்து, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

அதையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார்.

எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.

இறுதியாக, 2017ஆம் ஆண்டு தீர்ப்பை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சதீஸ்குமாருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு 15 வருடங்கள் சிறைக்குள் இருந்த சதீஸ்குமார், அந்த காலப் பகுதியில் 6 புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 3 டிப்ளோமா பட்டப்படிப்புகளையும் சிறைக்குள்ளேயே நிறைவு செய்துள்ளார்.

பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற சதீஸ்குமார், கடந்த 17ஆம் திகதி தனது வீட்டை வந்தடைந்தார்.

இதையடுத்து, சதீஸ்குமாரை பார்வையிடுவதற்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் எனப் பலரும் அவரது வீட்டை நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், செல்லையா சதீஸ்குமார் பிபிசி தமிழிடம் தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

உங்களுக்கு ஏதேனும் கோபம் இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக, என் வாழ்க்கை கேள்விக்குட்படும் போது நான் ஏதோ ஒரு தரப்பு மீது கோபப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதை மறுக்க முடியாது. அந்த சூழலில், அதாவது விடுதலைப் போராளிகளுக்கும், அரச படையினருக்கும் இடையிலான அந்த இன முறுகல் ஏற்பட்டது.

இதை ஒரு தரப்பு மீது மாத்திரம் குற்றம் சுமத்தி, நாம் ஒதுங்கி இருந்து பார்வையாளர்களாக இருந்து விட முடியாது. காரணம் என்னவென்று கேட்டால், தொன்றுதொட்டு இலங்கை அரசாங்கங்கயால் தமிழ் மக்களுடைய அடிப்படை பிரசினைகள், நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த போர் நிலைமை உருவானது.

அந்த சூழல் தவிர்க்க முடியாத சூழல், காலத்தின் கட்டாயம் ஆகிய நிலைமை காணப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு காரணமானவர்கள் யார் என்று பார்க்கும் போது, என் மீது குற்றம் சுமத்தியவர்கள் மீது நான் கோபம் கொள்வதில் நியாயம் இருக்கிறது என்றே கூற வேண்டும்.

கேள்வி: சிறைக்குள் இருந்து வெளியில் வரும் போது, உங்கள் மனதில் தோன்றியது என்ன?

பதில்: இறுதி நேரம் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியே, அந்த சிறை கதவை விட்டு வெளியில் வந்துக்கொண்டிருந்தேன். என்னதான் இருந்தாலும் 15 ஆண்டுகள் சிறையில் கொடூரமான சுதந்திரம் பறிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து மீளும் போது, அந்த தருணம் மிகவும் முக்கியமானது, வார்த்தைகளால் அதை வர்ணிக்க முடியாது. அப்படியொரு உணர்வு காணப்பட்டது.

அதேநேரம், நான் வெளியேறுவது ஒரு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், நான் விடை பெற்றுக் கொண்டு வந்த என் சக தோழமைகள், சிறையில் தொடர்ந்தும் இருப்பது மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது.

நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக செல்லையா நவரட்ணம் என்ற முதியவருக்கு வழக்கு விசாரணைகளுக்காக நேரடியாக சமூகமளிக்க முடியாத நிலைமை காணப்பட்டது. இவர் சார்பில் குறைந்த பட்சம், ஒரு சட்டத்தரணி கூட ஆஜராக கூடிய சூழல் அங்கு இருக்கவில்லை.

போரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டதற்கு ஒரு குடிமகன் எவ்வாறு பொறுப்பு கூற முடியும்? ஆகவே தனது நியாயத்தை கூற முடியாது 70 வயதை கடந்த நிலையில் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு அரசியல் கைதியின் பின்னணியும் கவலைக்கிடமாக காணப்படுகின்றது.

ஆகவே ஒட்டுமொத்த கைதிகளும் விரைவில் ஏதோ வகையில் விடுவிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் ஆளுகை பிரதேசத்தை வாழ்விடமாக கொண்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அவர்களால் நேரடியாக நீதிமன்றத்திலே சமூகமளிக்க முடியாத சூழ்நிலை பற்றி நான் சொல்லியிருந்தேன்.

இந்த நிலையிலேயே அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், அவர்களின் சட்டத்தரணிகளோ, அவர்களோ, அவர்களின் உறவினர்களோ சமூகமளிக்காத நிலையிலே, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அந்த சந்தேகநபரின் பிரசன்னம் இல்லாமல் அவருக்கு பதிலாக கதிரை (நாற்காலி) வைத்து அவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 200 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்க்கை காலம் 70 தொடக்கம் 80 வரை தான் இருக்கும் என நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: சிறைவாசத்துக்குப் பிந்திய வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்: நான் கைது செய்யப்படும் போது எனது வயது 29. விடுதலையாகும் போது எனது வயது 44. மிகவும் முக்கியமான, சத்தாக வாழும் காலத்தை, 15 வருடங்களை இழந்துவிட்டேன். ஏதோ ஒரு காரணத்தால், ஏதோ ஒரு தரப்பால் 15 வருட வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு குடும்பஸ்தர் என்ற வகையில் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. நான் கைது செய்யப்படும் போது எனது குழந்தைக்கு 3 வயது. தற்போது அவர் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கின்றார். எனது வாழ்க்கை துணைவி. எனது கைதுக்கு பிறகு, பொருளாதார, சமூக, அரசியல் பிரச்னைக்கு முகம் கொடுத்து, பாதுகாப்பு தரப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில், இனிமேல் வாழ முடியுமா என்ற நிலைமை வந்துள்ளது.

அந்த காலப் பகுதியில்தான் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதையடுத்து, எனது மனைவி இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அது நல்ல முடிவு என்றே நினைக்கின்றேன். எனது மகளும் தாயுடன் இருக்கின்றார்.

எனது குடும்பத்தின் நலன்களை கருத்தில் கொண்டு, எனது இழப்புகளை இழப்பாக கருதாமல், மீண்டும் எழுந்து குடும்பத்துடன் சேர்ந்து மிகுதி காலத்தை சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழ் அரசியல் கைதிகளை போன்றதுதான், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: என்னுடைய தாயார் 15 வருடங்கள் என்னை பிரிந்திருந்து, அவர் விடுத்த கண்ணீர் போல 10 மடங்கு கனதியானது, காணாமல் போனோரின் தாய்மாரின் கண்ணீர். அவர்களில் பலதரப்பட்ட வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டின் கோரிக்கையை ஏற்று, அவர்களைக் கையளித்து, அதன்பின்பு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது. அதை எந்தவொரு தாயாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை இன, மத, மொழி என்று பெயர் வைக்க முடியாது. அவர்களின் கண்ணீர் மிக மிக கனதியானது.

அந்த தாய்மாரின் போராட்டத்துக்கு நிச்சயம் தீர்வு கிடைக்க வேண்டும். இவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்வது அநாகரிகமானது.

ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக
20 மார்ச் 2023

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

Anarkali March 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தூய யூதாததேயு ஆலயத்தின் திருநாளை முன்னிட்டு சிரமதானப் பணி
Next Article இலங்கைக்குக் கடன் வழங்க நாணய நிதிய நிர்வாக சபை அனுமதி
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?