அமெரிக்க படகு மீது கியூபா படையினர் துப்பாக்கிச் சூடு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மூலம் கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்தவர்கள் மீது அந்நாட்டு கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

 இச்சம்பவத்தில் மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தீவொன்றுக்கு அருகில் அதிவேகப் படகில் வந்தவர்கள் மீது தமது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கருத்துத் தெரிவிக்கையில், படகில் இருந்த நபர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய சம்பவம் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article