By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கு வெளிவாரிப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தில் அநீதி – சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டு!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வடக்கு வெளிவாரிப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தில் அநீதி – சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டு!
வன்னிச் செய்திகள்

வடக்கு வெளிவாரிப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தில் அநீதி – சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டு!

Last updated: 2023/09/20 at 9:52 PM
Published September 20, 2023 526 Views
Share
2 Min Read
SHARE

உள்ளூராட்சி மன்றங்களில் அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரத் தொழிலாளர்களாகவும், வேலை வெளிக்களத் தொழிலாளர்களாகவும் 180 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது மூன்று வருடங்கள் தொடர் சேவையில் ஈடுபட்டு வரும் 406 வெளிவாரிப் பணியாளர்கள் இந் நியமனத்திற்குள் உள்ளீர்க்கப்படாததால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அவரால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 406 வெளிவாரித் தொழிலாளர்களது விவரப்பட்டியல் உள்ளடங்கலாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்றங்களின் சேவைப்பரப்பினுள் அடங்கும் திண்ம, திரவக் கழிவகற்றல், பொதுச் சந்தைகள் மற்றும் குத்தகை நிலையங்களின் மேற்பார்வை, வரி அறவீடு, காவற்கடமை உள்ளிட்ட இடர்மிகு பணிகளை ஏராளமான சமூகச் சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் செவ்வனே நிறைவேற்றி வந்த இத்தொழிலாளர்கள், என்றோ ஒரு நாள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீண்டகாலம் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றனர்.

ஆளணி முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கில் வடக்கு மாகாணசபையில் நடைமுறையிலுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், குறித்த ஓர் உள்ளூராட்சி மன்றத்தின் நிருவாக எல்லைக்குள் இயங்குகின்ற பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட சமூகமட்ட நிறுவனங்களும் உள்ளூராட்சி மன்றங்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே மேற்குறித்த 406 வெளிவாரித் தொழிலாளர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவர்களுக்கான தினவரவுப் பதிவு, மாத வேதனம், விடுமுறை உள்ளிட்ட சலுகைகள், உரிமைகள் அனைத்தும் அந்தந்த உள்ளூராட்சி மன்றத்தினாலேயே நிருவகிக்கப்படுகின்ற போதும், வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றும் இவ் ஊழியர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்ப்பதில் நிருவாக இடர்பாடுகள் இருப்பதாகக்கூறி அவர்களது நிரந்தர நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளமை, உள்ளூராட்சி மன்றங்களை முழுமையாக நம்பியிருந்த அத்தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வாழ்வாதார ரீதியான பிடிமானங்களற்று அந்தரிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

எனவே, இதுவிடயமாக தாங்கள் உயரிய கரிசனை கொண்டு உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் அட்டவணைப் படுத்தப்படாத பதவிகளுக்கு நியமனம் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், வெளிவாரி அடிப்படையிலான ஒப்பந்தப் பணியாளர்களாக வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 406 தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க ஆவனசெய்வதன் மூலம், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்வளிக்க முன்வர வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். – என்றுள்ளது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali September 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லைத்தீவு நிக்கவெவ இடது கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் கையளிப்பு!
Next Article உரமானியத்துக்கான பதிவுகளை நெடுந்தீவு விவசாயிகள் மேற்கொள்ளலாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?