அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட 37 குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையை வழங்கியிருந்தனர்.
இதில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் வைத்திய அதிகாாி எம்.நந்தினி, பொது சுகாதார பரிசோதகர் ரி.ரவினதாஸ் மற்றும் தாதியர்கள் ஆகியோர் தமது அர்ப்பணிப்பான சேவையில் ஈடுபட்டிருந்தார்கள்.