By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

Last updated: 2024/09/20 at 3:31 AM
Published September 20, 2024 261 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களும் சேர்த்து, யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தம் 593,187 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்குப்பதிவு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்குப்பதிவு நிலையங்களும் என மொத்தம் 619 வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று (செப் 19) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனை கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:
வாக்களிப்பு நிலையங்களில் செப்டம்பர் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். பிற்பகல் 4 மணிக்கு வரை, வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும், ஆனால் 4 மணிக்கு பிறகு நிலையத்திற்குள் நுழைவது அனுமதிக்கப்படாது.

தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள், பருத்தித்துறையில் தற்காலிகமாக வசிக்கின்றவர்களுக்கு, வியாபாரிமூலையிலிருந்து தெல்லிப்பழைக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளுக்காக 8,232 அதிகாரிகள் மற்றும் 2,100 பொலிஸார் இணைந்து பணியாற்றவுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை 42 பேருந்துகள், மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கம் 132 பேருந்துகளை தேர்தல் கடமைகளுக்கு ஒழுங்கு செய்துள்ளது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவில் வாக்களிப்பு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டு வரப்படும்.

முக்கிய தலைமை அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் இன்று (செப் 20) காலை 7 மணிக்கு யாழ். மத்திய கல்லூரியில் வழங்கப்படும். முதலாவது பேருந்து காலை 8:30 மணியளவில் புறப்படும்.

வாக்குகளை எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேறுகளை வெளியிடும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 511 வாக்குப்பதிவு நிலையங்களின் வாக்குகளை எண்ண 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ண 14 நிலையங்களும், மொத்தம் 55 வாக்கு எண்ணும் நிலையங்கள் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

SUB EDITOR September 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபானக் கடைகளை மூடுவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்.
Next Article பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அறிவிக்கப்படும்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?