கெஹெலிய, ராஜித, தயாசிறி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின்வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் இரகசியபொலிசிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவாக்கத்தில் ஈடுபடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போலியானதகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் அங்கீகரித்த உயர்ந்தபட்சதொகையையும் விட கூடுதலான தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளதாககுறித்த 12 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கொழும்புநீதவான் நீதிமன்றம் அரச வங்கிகளுக்கு கட்டளையிட்டது.