By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே முற்றுப்புள்ளி!- தமிழக கடற்றொழில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே முற்றுப்புள்ளி!- தமிழக கடற்றொழில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு!
இலங்கைச் செய்தி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே முற்றுப்புள்ளி!- தமிழக கடற்றொழில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு!

Last updated: 2023/11/13 at 11:31 PM
Published November 13, 2023 410 Views
Share
2 Min Read
SHARE

இலங்கையின் வடப்பகுதி கடற்றொழிலாளர்களுக்கும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூர்ப்படைந்து தற்போது தீவிரமடையும் நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமைகள் மேலும் மோசமடையாது முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந் திய, இலங்கை அரசுகள் உடனடியாக இதயசுத்தியான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர் நலவாரிய உறுப்பினரும் அனைத்து விசைப்படகுகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான எஸ். யேசுராசா தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தமிழக மீனவர்களின் கைதுகள் தொட ருகின்ற அதேநேரம், தமிழக மீனவர்கள் மற்றும் இழுவை மடி படகுகளின் அத்துமீறல்கள் நீளுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 64 பேர் வடமாகாணத்தில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 38 பேர் மன்னார் நீதிமன்றத்தின் மூலமும், 38 பேர் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மூலமும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 22 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்திருந்தபோதும் அவர்கள் விடுவிக்கப்படாமை எமக்கு ஏமாற்றமளிக்கின்றது. நாம் தொடர்ச்சியாக தொழிற் சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். எனினும், 42 பேர் வரையில் விடுவிக்கப்பட்டமையால் அதனை இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கையாகக் கருதி நாம் போராட்டத்தினைக் கைவிட்டிருந்தோம். அதேநேரம், எமது போராட்டத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆரம்பத்தில் அரச மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தபோதும் அதில் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய நிலையில், ஒரேமொழி பேசுகின்ற சகோதரர்களாக பழகுகின்ற, கடலில் ஆபத்தென்றால் கைகொடுகின்ற, ஓரினத்தைச் சேர்ந்தவர்களுக்குள் மோதல்கள் உருவாகும் நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆரம்பத்தில் தவறுதலாக எல்லை மீறுபவர்கள் மீது நட டிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டன.

இப்போது படகுகளும் நபர்களும் தடுத்துவைக்கப்படும் நிலை மோசமடைகின்றது. இதனால் அண்ணன், தம்பிகளாக பழகும் இருநாட்டு கடற்தொழிலாளர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. இந்த முரண்பாடுகள் வோண்டுமென்றே தோற்றுவிக்கப்படுகின்றன.

இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரத்துக்காகவே போராடுகின்றார்கள். அவ்வாறான நிலையில் இரு தரப்பினரையும் மோதவிடுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற அச்சம் எமக்கு உள்ளது.

எனவே இந்த நிலைமையை மேலும் திவிரமளிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. உடனடியாக இலங்கையின் மிகப்பெரும் நட்பு நாடாகவும் அயல் நாடாகவும் இருக்கும் இந்தியா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இருநாட்டு அரசாங்கங்களும் இதயசுத்தியுடன் பேச்சுக்களை முன்னெடுத்து நியாயமான உடன்பாடுகளின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை எட்ட வேண்டும் என்று எதிர்பார்கின்றோம்- என்றார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali November 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தெல்லிப்பளையில் அரச காணிகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு!
Next Article இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக டேவிட் கமரூன் நியமனம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?