யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில்இருந்தும் இன்றைய தினம் (ஜூலை 22) செவ்வாய்க்கிழமை சிறுகுழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல் மற்றும் ஆடைகளை ஒத்த துணிகள்என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01″ மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02″ என நீதிமன்றினால்அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள்முன்னெடுக்கப்பட்டு வருகிறது.