புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதமசெயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டுவிழாவும் அம்பலவாணர் கலையரங்கில் இன்றையதினம் (மே25) பேராசிரியர்கா.குகபாலன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர்புங்குடுதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்திலிருந்து விருந்தினர்கள் சகிதம் பாண்ட்வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது நூறு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து இளங்கோவன்மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் , வாழ்த்துரைகள் , கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை பிரதேச செயலர், பளை பிரதேச செயலர் மற்றும் பொது அமைப்புப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.