By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பாடசாலை மாணவர்களிடையே நீடிக்கும் மன அழுத்தம்
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பாடசாலை மாணவர்களிடையே நீடிக்கும் மன அழுத்தம்
இலங்கைச் செய்தி

பாடசாலை மாணவர்களிடையே நீடிக்கும் மன அழுத்தம்

Last updated: 2025/03/27 at 7:43 AM
Published March 27, 2025 96 Views
Share
2 Min Read
SHARE

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் நேற்று (மார்ச் 26)தெரிவித்துள்ளது.

பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

10 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவு இளமைப் பருவம் என்று அழைக்கப்படுகிறது.

நாட்டின் 22 மில்லியன் மக்கள் தொகையில் 3.5% பேர் அந்த பருவத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் காலகட்டத்தில், பிள்ளைகளின் உடல், மன மற்றும் சமூக நடத்தையில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதாகவும், எனவே, இந்தக் கட்டத்தில் அவர்கள் மீது மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் இளம் பருவ நடத்தை குறித்த தரவுகளைப் பெறும் நோக்கத்துடன், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் 2024 ஆம் ஆண்டில் ‘உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பை’ நடத்தியது.

இதில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 2,585 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கணக்கெடுப்பு இதற்கு முன் 2016 இல் நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் குறித்த பல சர்ச்சைக்குரிய உண்மைகள் வௌியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த மாணவர்களில் 21.4% பேர் எடை குறைவாகவும், 12.1% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனாகவும் அடையாளம் காணப்பட்டனர்.

வீட்டில் உணவு இல்லாததால் 4.3% மாணவர்கள் காலை உணவின் போது பெரும்பாலும் பசியுடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும்போது பல சர்ச்சைக்குரிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த மாணவர்களில் 22.4% பேர் கடந்த வருடம் பெரும்பாலும் அல்லது அடிக்கடி மிகவும் தனிமையை உணர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 18% ஆகும்.

அதன்படி, கடந்த வருடத்தில் 15.4% மாணவர்கள் தற்கொலைக்கு வலுவாக உந்தப்பட்டுள்ளனர் என்றும், 9.6% பேர் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 5.7% பேர் புகைப்பிடிப்பவர்களாகவும், 5.3% பேர் மது அருந்துபவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகும்.

போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது, மேலும் 3.2% மாணவர்கள் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பெறப்பட்ட தரவுகளின்படி, கஞ்சா பயன்படுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.1 வீதமாகும்.

இதேவேளை, பாடசாலை நாட்களில் 63% பாடசாலை மாணவர்கள் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே நித்திரை கொள்ளவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தூக்கம் ஒரு அத்தியாவசிய காரணியாக இருப்பதால் இது ஒரு பிரச்சனைக்குரிய சூழ்நிலை.

28.4% மாணவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இணையம் அல்லது சமூக ஊடகங்களை கையடக்க தொலைபேசி வழியாக கல்வி சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, பெற்றோர்கள் தங்கள் மாணவர்களின் நடத்தை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR March 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!
Next Article ஊர்காவற்றுறை விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?