By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவுக் கரையோரம் பெருமளவு உள்வாங்கல் மாவட்டச் செயலர் மகேசன் தெரிவிப்பு.
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவுக் கரையோரம் பெருமளவு உள்வாங்கல் மாவட்டச் செயலர் மகேசன் தெரிவிப்பு.
நெடுந்தீவு

நெடுந்தீவுக் கரையோரம் பெருமளவு உள்வாங்கல் மாவட்டச் செயலர் மகேசன் தெரிவிப்பு.

Last updated: 2020/12/07 at 6:18 AM
Published December 7, 2020 574 Views
Share
1 Min Read
SHARE

புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால் காவுகொள்ளப்படவுள்ள நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ் மாவட்டச் செயலர் கே. மகேசன். 

இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட புரேவிப் புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நெடுந்தீவுப் பிரதேசத்தைப் பார்வையிட்டுத் திரும்பியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சில இடங்களில் 3 அடிக்கு மேல் வெள்ளம் நிறைந்துள்ளது. சில கிராமசேவையாளர் பிரிவுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இன்று வரை முற்றாகத்துண்டிக்கப்பட்டுள்ளது. மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தினுள் நீர் புகுந்துள்ளமையால் அதனை உடனடியாக இயங்க வைக்க முடியாத நிலமை தோன்றியுள்ளது. அது சம்மந்தமாக இலங்கை மின்சார சபையின் மாவட்டமின் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விரைவாக மின் கிடைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடலை நம்பி வாழும் 40க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. வலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை விரைவுபடுத்துமாறு பணித்துள்ளேன். 

கரையோரப் பிரதேசங்கள் கடுமையான கடலரிப்புக்குள்ளாகியுள்ளன. கரையோரத்தில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்பு வளவுகள் கடலரிப்பினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை நேரில் அவதானித்துள்ளேன். 

பாதிக்கப்பட்டுள்ள சுமார் 760 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவ தற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலர் மேற்கொண்டுள்ளார். அதனைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன். வெள்ளம் வடிந்தோடுவ தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மழையுடனான காலநிலை தொடருமானால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. இறங்கு துறை முற்றாகச் சேதமடைந்துள்ளதால் அதனைப் புனரமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்- என்றார்.

 

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR December 7, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நயினாதீவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Next Article நெடுந்தீவு மீனவரின் படகு மன்னாரில் கரை ஒதுங்கியது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?