தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரானபோராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவிகாரைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (பெப். 11) மாலை போராட்டம்ஆரம்பமாகின்றது.
விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளஇந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுஅமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்சங்கமும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக சங்கத்தின் தலைவியோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக்கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தமது காணியை விடுவிக்க கோரிமக்கள் பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆகையால் இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களைவிடுத்து அனைத்துஅரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அணிதிரள வேண்டும் எனதெரிவித்துள்ளனர்.