நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 இல் இன்றையதினம் (வியாழக்கிழமை – ஏப்ரல்10) காலை பக்தர்களின் அரோகரா ஒலியுடன் வீரபத்திரப் பிள்ளையார் தேரேறி அருள்பாலிக்கும் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
விநாயகப் பெருமானின் அருள் வேண்டி அடியவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியதுடன் , தாகசாந்தி நிலையம் மற்றும் அன்னதானம் வழங்கல் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றது.
தேரேறி அருள்பாலித்த நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையாரின் பூசை நிகழ்வுகள் யாவும் எமது முகநூலூடாக நேரலையினை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.