முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளைவியாழக்கிழமை (மார்ச்20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறைநீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (மார்ச் 19) உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேனபகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைகைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துசெய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோனால் ரிட் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டுநீதிமன்றினால் மார்ச் 17 அன்றை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் (மார்ச்19) காலைமாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், குறித்த வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில்தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்துதேசபந்து தென்னக்கோனை நாளை (மார்ச்20) வரை விளக்கமறியலில்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.