யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டஅகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எலும்புக்கூடுமீட்கப்பட்டுள்ளது
இந்தப் பணிகள் மீண்டும் கடந்த வியாழக்கிழமை (மே15) ஆரம்பமானநிலையில் நேற்று (மே16) நடைபெற்ற இரண்டாம் நாள் அகழ்வின் போதேஇந்த மனித எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சோமதேவாவின் தலைமையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள்இன்று (மே17) முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் அதிகாலை முதல் பெய்துவரும் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப்பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள்வெட்டப்பட்டபோது, மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதஎச்சங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டது.
முறைப்பாட்டின் படி கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி யாழ் நீதிமன்றநீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனித எச்சங்கள்மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.