By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் 90 சதவீதமானவற்றை நாமே நிறைவேற்றினோம் – நீதியமைச்சர் சுட்டிக்காட்டு!
Share
Notification
Latest News
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் 90 சதவீதமானவற்றை நாமே நிறைவேற்றினோம் – நீதியமைச்சர் சுட்டிக்காட்டு!
இலங்கைச் செய்தி

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் 90 சதவீதமானவற்றை நாமே நிறைவேற்றினோம் – நீதியமைச்சர் சுட்டிக்காட்டு!

Last updated: 2023/05/14 at 7:31 AM
Published May 14, 2023 240 Views
Share
2 Min Read
SHARE

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல்மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சட்டங்களை நாமே தயாரித்தோம் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்குப் பயனுடைய வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்த நீதியமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று நேற்று(மே 13) சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், நாமனைவரும் ஒவ்வொரு மட்டத்திலிருந்து நாட்டுமக்களுக்கு சேவையாற்றிவருகின்றோம். நாம் வகிக்கும் பதவியும், எமக்குரிய பொறுப்புக்களும் வேறுபடலாம். இருப்பினும் எம்மனைவரினதும் இலக்கு ஒன்றுதான். நாடு என்ற ரீதியில் நாம் அபிவிருத்தியடையவேண்டுமானால், முதலில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவேண்டும்.

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படாததன் விளைவாக தங்கச்சுரங்கங்களைக்கொண்ட பல ஆபிரிக்க நாடுகளால் இன்னமும் அபிவிருத்தியடையமுடியவில்லை. தற்போது நாமும் அந்நாடுகளையொத்த நிலையிலேயே இருக்கின்றோம்.

எமது நாட்டில் இல்லாத வளமென்று எதனையும் கூறமுடியாது. எம்மிடம் உள்ள வளங்கள் இந்தியாவில்கூட இல்லை. இருப்பினும் நாம் இன்னமும் உரிய இடத்தை அடையவில்லை. ஜப்பான், கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் எம்மை விடவும் பின்னடைவான நிலையிலேயே இருந்தன.

அந்நாடுகளின் தலா வருமானம் எமது நாட்டைவிடக் குறைவான மட்டத்திலேயே காணப்பட்டன. கல்வியறிவு வீதம், சிசு மரணவீதம், கர்ப்பிணித்தாய் மரணவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குமிடத்து எமது நாடு முன்னேற்றகரமான மட்டத்தில் உள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதென்பது ஏனைய நாடுகளுக்கு இலகுவானதொரு விடயமாக இருக்கவில்லை.

இருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில் நிதியமைச்சும், திறைசேரியும் மிகச்சரியாக செயற்பட்டு, இந்தக் கடனுதவிக்கான இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றன என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

ஆனால் இவ்விடயத்தில் நீதியமைச்சு சரியாக செயற்பட்டிருக்காவிட்டால் இந்த இணக்கப்பாட்டை எட்டுவதில் மேலும் ஒருவருட காலதாமதம் ஏற்பட்டிருக்கும் என்ற விடயம் மக்களுக்குத் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன.

அதேபோன்று எமது நாடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்திருந்த காலப்பகுதியில், அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிபந்தனைகளில் நூற்றுக்கு அறுபது சதவீதமான நிபந்தனைகள் எமது அமைச்சினாலேயே நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல்மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சட்டங்கள் எமது அமைச்சினாலேயே தயாரிக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டினார்.

You Might Also Like

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

Anarkali May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஜி.எஸ்.பி பிளஸுக்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு!
Next Article வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

July 28, 2025
இலங்கைச் செய்தி

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

July 28, 2025
இலங்கைச் செய்தி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

July 28, 2025
இலங்கைச் செய்தி

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

July 28, 2025
இலங்கைச் செய்தி

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

July 28, 2025
இலங்கைச் செய்தி

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

July 28, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?