By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சமஷ்டி தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சமஷ்டி தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து!
இலங்கைச் செய்தி

சமஷ்டி தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து!

Last updated: 2023/06/20 at 1:11 PM
Published June 20, 2023 340 Views
Share
2 Min Read
SHARE

இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பான மனோ கணேசனின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தம் அகற்றப்பட வேண்டும் என வடக்கின் கட்சித் தலைவர் ஒருவர் என்னிடம் நேரடியாகச் சொன்னார்.

என்னப்பா இதைத்தானே சிங்கள இனவாத பிக்குகளும் கூறுகிறார்கள் என எனக்கு சின்னதா ஒரு அதிர்ச்சி. இதை நான் கேட்டேன்.

“இல்லை, அண்ணை, அப்போதுதான், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் வரும்” என்றார் அவர். தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையடைவது நல்லதுதானே. அதற்கான இவர்களது ‘லொஜிக்’ இது.

பதின்மூன்று மாகாண சபையா, பதின்மூன்று ப்ளஸ் மாகாண சபையா, இந்திய மாநில ஆட்சி மொடலா, சமஷ்டியா, கூட்டரசா, ஐம்பதுக்கு ஐம்பதா அல்லது கடைசியாக ரணிலின் இடைக்கால ஆலோசனை சபையா… தமக்கு என்ன தீர்வு தேவை என்பதைச் சகோதர ஈழத்தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கட்டும். அதுதான் உள்ளக சுயநிர்ணய உரிமை.

பதின்மூன்றைக் கொண்டு வந்த பாரத நாடே, அங்குள்ள இந்திய மாநில ஆட்சி அதிகாரங்களுக்கு சமமாகக் கூட, மாகாண சபையை ஏற்பாடு செய்யவில்லை என்றுகூட நான் பகிரங்கமாக அன்று என் உரையில் கூறினேன். நான் எவரையும் பதின்மூன்றை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறவே இல்லை.

பதின்மூன்று அகற்றப்பட்டு, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை அவர்கள் நிராகரித்தால், அது அவர்களது கட்சி முடிவு. அக்கட்சியின் முடிவு அப்படி என்றால், அது அவர்களது உரிமை நிலைப்பாடு. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

அதேபோல், சின்னதா அதிர்ச்சியடைய எனக்கும் உரிமை இருக்கிறதல்லவா?

ஏனெனில் பதின்மூன்றாம் திருத்தம் அகற்றப்பட்டால், மாகாண சபைகளே போய் விடும். முதலில் மாகாண சபைகளைப் பெற்று அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம் என எண்ணும் ஏனையோருக்கு இதில் உடன்பாடா எனத் தெரியவில்லை.

மேலும் மாகாண சபை வடக்கில், கிழக்கில் மட்டும் இல்லை. நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இருக்கின்றன. இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, இவர்கள் சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்.

நானறிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் முதல் அமைச்சர் டக்ளஸ் வரை கூட எவரும் பதின்மூன்றை முழுமையான இறுதித் தீர்வாக ஏற்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். அது இடைக்கால தீர்வுதான். இரா. சம்பந்தன் பலமுறை இது பற்றி தெளிவாகக் கூறி விட்டாரே.” – என்றுள்ளது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali June 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மருத்துவர்களின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு!
Next Article நெடுந்தீவுக் கொலைச் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?