By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு பயணிகளுக்கு முன்னுரிமை!- அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு பயணிகளுக்கு முன்னுரிமை!- அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
நெடுந்தீவு

குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு பயணிகளுக்கு முன்னுரிமை!- அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Last updated: 2023/10/26 at 10:26 PM
Published October 26, 2023 506 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(ஒக்ரோபர் 26) நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அதிகாரிகள், நயினாதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலான போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பாரிய தனியார் பயணிகள் படகு குறிகட்டுவான் இறங்கு துறையில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால், நெடுந்தீவிற்கான பயணிகள் படகு சேவையை சீரான முறையில் உரிய நேரத்திற்கு முன்னெடுக்க முடிவதில்லை எனவும், இதனால் அரச உத்தியோகஸ்தர்களும் பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அசௌகரியங்களை களையுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஐப்பசி மாதத்திற்கான முதலாவது கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண நிர்வாகத்தினாலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேலும், யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சட்ட விரோத, சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக குடியிருப்புக்களையும் விவசாய மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பொருத்தமான காணிகளையும் விடுவிக்கும் நோக்கில், 1985 ஆண்டுக்குப் பின்னர் குறித்த அரசாங்க திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று, சட்ட விரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோத மதுபானசாலைகள், அனுமதியற்ற முறையில் விவசாய நிலங்களில் கட்டிடங்கள் கட்டப்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அவற்றை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் மக்கள் பிரதிநிதிகளினால் அதிகாரிகளுகளுக்கு வளங்கப்பட்டது.

அதேபோன்று கால்நடை, விவசாயம் போன்ற துறைகளை விருத்தி செயதல் மற்றும் போக்குவரத்து தரப்பினர், சிகை அலங்கரிப்பாளர்கள் போன்றோர் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இன்று கூட்டத்தில், மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

Anarkali October 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article காரைநகர் பிரதேச செயலகமும் நலன்புரிச்சங்கமும் இணைந்து நடாத்திய வாணிவிழா!
Next Article சிறப்புற நடந்த நெடுந்தீவு பிரதேச செயலக வாணிவிழா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?