By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடா குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் இலங்கை!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கனடா குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் இலங்கை!
இலங்கைச் செய்தி

கனடா குறித்த இந்தியாவின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் இலங்கை!

Last updated: 2023/07/01 at 8:39 AM
Published July 1, 2023 257 Views
Share
1 Min Read
SHARE

கனடா ‘வாக்கு வங்கி அரசியல்’ மூலமே இயக்கப்படுகின்றது என்று இந்தியா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை இலங்கை ஆதரித்துள்ளது.

‘காலிஸ்தான்’ விவகாரத்தைக் கையாள்வதில் கனடா ‘வாக்கு வங்கி அரசியலால்’ இயக்கப்படுவதுபோல் தெரிகின்றது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கனடாவின் செயற்பாடுகள் வாக்கு வங்கி அரசியலால் தூண்டப்பட்டவை போல தெரிவதாகவும், இது அண்மையகாலங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஊடக சந்திப்பொன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிடும் காணொளி சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் பகிரப்பட்டுவருகின்றது.

அக்காணொளியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தை ஆதரிக்கும் வகையில் ‘வாக்கு வங்கி அரசியல் தவிர வேறென்ன?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென ‘காலிஸ்தான்’ என்ற தனித்த அரசை நிறுவுமாறு வலியுறுத்திவரும் ‘காலிஸ்தான் இயக்கம்’ என்ற பிரிவினைவாத இயக்கத்தினர், ஏற்கனவே இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைப் பெருமைக்குரிய விடயமாகக் காண்பிக்கும் வகையில் கனடாவின் பொதுவிடமொன்றில் உருவப்பொம்மைகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியிருந்த விவகாரத்திலும் இலங்கை அதன் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

‘நீங்கள் பயங்கரவாதத்தைக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில், அதனூடாக பிறிதொரு தலைமுறையைத் தவறாக வழிநடத்துகின்றீர்கள்’ என்று அப்போது அமைச்சர் அலி சப்ரி கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali July 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கையின் வளர்ச்சிக்கு சீன முதலீடுகள் தூண்டுதல் அளித்தன -வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு!
Next Article பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?