ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

2025 தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதிய திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத ஏராளமான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். “700,000க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிவோம்.

நாங்கள் ஓய்வுபெற்ற அமைப்புகளைச் சந்திக்கிறோம். பிரதி அமைச்சர், செயலாளர், பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறோம்.

ஞறனொநாங்கள் இன்னும் அடையாளம் காண முடியாத பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கிறது.” என்றார் .

இந்நிகழ்வில் தேசிய மற்றும் மேற்கத்திய வைத்திய முகாம்கள், சுகாதார சொற்பொழிவுகள், மூத்த கலைஞர்களின் அழகியல் விளக்கக்காட்சிகளுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சிறப்பு பரிசு விநியோகம் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி, மூத்த கலைஞர்கள், உள்ளூர் மற்றும் மேற்கத்திய சிறப்பு வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட ஓய்வூதியத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article