உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பாடசாலை வருகையின் 40 வீதத்தை மாத்திரமே கருத்தில் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை 2023ஆம் ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80% வருகையைப் பரிசீலிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்திற்க் கொண்டு இந்த ஆண்டு 40% வருகையை மாத்திரமே பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.