எலக்ரோனிக் முறையில் இயங்கும் இந்த இ-கேட்ஸ் முறையில், முதல் முறை செயற்படுத்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பதிவுப்பிரிவில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் பின்னர், இலத்திரனியல் கதவு வழியாக கடவுச்சீட்டு மற்றும் விரல் ரேகை அடையாளங்களை பதிவு செய்துக்கொள்வதன் மூலம் இலகுவாக வெளியே வந்துவிடலாம்.

விமான நிலைய மேம்படுத்தலின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயற்ப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் புறப்படும் (departure) பகுதியிலும் தற்சமயம் மேலதிக இமிகிரேசன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.