தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில்வைத்து நேற்றையதினம் (மே21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனைபகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும்தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ்நிலையத்திற்கு சென்றபோது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியைபிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்கமுடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது நேற்று பிற்பகல் ஒரு குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் கடத்திச்சென்றனர். இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டதெல்லிப்பழை பொலிஸார் குறித்த யுவதியை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாகஈடுபட்டு வருகின்றனர்.