By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: “இலை பெய்யும் காலம்” கவிதை நூல் பற்றி புதிய சொல் சஞ்சிகை ஆசிரியரின் விமர்சனம்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > “இலை பெய்யும் காலம்” கவிதை நூல் பற்றி புதிய சொல் சஞ்சிகை ஆசிரியரின் விமர்சனம்!
நெடுந்தீவு

“இலை பெய்யும் காலம்” கவிதை நூல் பற்றி புதிய சொல் சஞ்சிகை ஆசிரியரின் விமர்சனம்!

Last updated: 2024/01/07 at 11:35 AM
Published January 7, 2024 558 Views
Share
4 Min Read
SHARE

நெடுந்தீவு நேதாமோகனின் “இலை பெய்யும் காலம் “ கவிதை நூல் அண்மையில் நெடுந்தீவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நூல் பற்றிய புதிய சொல் சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான கிரிசாந் அவர்களின் விமர்சனம்.

எழுந்துவரும் புதிய எழுத்தாளர்கள் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று தயக்கம். ஈழத்து இலக்கியச் சூழலில் 2009 க்குப் பின்னர் எழுத வந்த முதற் தலைமுறை எழுத்தாளர்களில் பலர் தங்கள் எழுத்தால், அதன் மீதுள்ள தீராத ஆர்வத்தால் இன்று கவனிக்கப்படுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், யதார்த்தன், ஆதி பார்த்திபன் என்று ஒரு வரிசை உருவாகி வந்திருக்கிறது. நானும் இவர்களின் சமகாலத்தில் இலக்கியத்தில் எழுத வந்தவன்.
இன்று பத்தாண்டுகளில் இலக்கியத்தில் இவர்களது இடத்தை உருவாக்கிய முக்கியமான அம்சம், பண்பாட்டில் தன்னுடைய இடம் ‘எழுத்தாளர்’ என்றவர்கள் உணர்ந்தமை. வேறு எதுவுமில்லை நாங்கள் சொல் அமைந்தவர்கள் என்பதை உணர்ந்து தயக்கமின்றி இந்தச் சூழலை எதிர்கொண்டு இன்றவர்கள் எழுத்தினால் தங்களுக்கான இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று வருவபவர்களிடம் ஒரு விதமான தயக்கம் நிலவுவதை அவர்களின் எழுத்துகளில் அவதானிக்கிறேன். அது தேவையற்றது. இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர்களின் முன்னகர்வை மிகவும் தாமதப்படுத்திவிடக் கூடிய அம்சம் அது. எழுதிப் பயின்று உரையாடியே இலக்கியம் முன்னகர முடியும். யாரும் யாரையும் தடுக்கவோ வரையறுக்கவோ முடியாது. எழுத்தின் மீதுள்ள குன்றாத ஆர்வமே ஒருவரை கவிஞராகவோ புனைகதை எழுத்தாளரோ ஆக்குகின்றது.
*
கவிஞர் நேதாமோகனின் இலை பெய்யும் காலம் என்ற கவிதைத் தொகுப்பு தாயதி பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. 2015 இல் துணிச்சல்காரன் என்ற முதற் தொகுப்பு வெளியானது. நெடுந்தீவைச் சேர்ந்த இவரது பெயர் நெடுந்தீவு நேதாமோகன் என்றே பெயரிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தது.
*
இலை பெய்யும் காலம் என்னளவில் முக்கியமான தொகுப்பு, மேற் சொன்ன காலகட்டத்தின் தொடக்கத்தில் இவரது முதற் தொகுப்பு வந்திருந்தாலும் இலக்கிய மதிப்பீட்டில் இவருடைய எழுத்துகள் கவனத்தை உண்டாக்கவில்லை. ஆரம்ப நிலை கவிஞராகவே கருதப்பட்டார்.

நேதாமோகன் தன் மகனுடன்
இலை பெய்யும் காலம் தொகுப்பில் அவரது வளர்ச்சியை கவனித்து உரையாடியே ஆக வேண்டிய இடத்திற்கு நகர்ந்திருக்கிறார். கவிதையில் தாகத்தோடும் எழுதும் ஓர்மத்தோடும் தொடர்ந்து முன் சென்றால் நேதாவால் தனக்கான இலக்கிய இடத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்தத் தொகுப்பில் உள்ள சில வரிகள் அவரது மனம் கொள்ளும் விரிவை, கவிதை தன்னை மறந்து அவரில் நிகழ்வதை வெளிக்காட்டுகிறது.
ஒரு கவிதை இப்படித் தொடங்குகின்றது,
‘ இருளும் அமைதியும் நிறைந்த
பள்ளத்தாக்கில் இருந்து கத்துகிறேன்
ஒரே ஒரு வெளிச்சத்தின் துளிக்காக..
தொடர்ந்து அவ்விருளில் நிகழும் காட்சிகளை விபரித்தபடி சென்று இறுதி வரிகளில் சொற்கள் இப்படிக் கவிதையாகின்றன.
‘ ஓர் ஒளிமுகத்தின் தீச்சுடர்
இருவிழிகளில் கிரகணம் அள்ளி
எப்போதும் வரும் என் இருட் குகைக்குள்’.
ஒரு கவிதை காய்ந்த சருகுக் குவியலிலிருந்து முதற் புகையென எழுந்து மேகம் வரை நீளும் கனவு போல் ஆக வேண்டும். அதன் விரிவே அதன் மதிப்பை உருவாக்குவது. இத்தகைய விரிவு கொள்ளும் வரிகளினாலேயே அவரது கவிதை மனம் நம்மைத் தொடுகின்றது.
இன்னொரு அம்சம் கவிதைக்குள் நிகழும் கதை. கதையைக் கவிதை எதிர்கொண்டு கவித்துவத்தை அடையும் தருணத்தினால் அதை எரியும் சோகமாகவோ அல்லது உதட்டில் அலைபுரளும் புன்னகையாகவோ மாற்றும். மழை நாள் என்றொரு கவிதை,
நேற்று முளைத்த செடி
ஒன்றிற்குப் புயலை எதிர்க்க
கற்றுக்கொடுக்கிறது தாய்மரம்
புற்றுக்குள் இருந்து
ஒரு தொகை மண்ணை வெளியேற்றி
அவசரமாக இடம் மாறுகின்றது எறும்புக்கூட்டம்
வேலைக்குச் செல்லும் கணவனை
புயலையும் தீராத மழையையும் காரணம் காட்டி
காதலிக்க அழைக்கிறாள் மனைவி
மின்சாரத் தடங்கலுக்காக
அடிக்கடி சினந்து கொள்கிறான் மகன்
என் நண்பன் தொலைபேசியில் அழைத்து
இந்த அடைமழைக்கு
தேநீரும் சிகரெட்டும்
குடித்தால் நன்றாய் இ

ருக்கும்
என்று நலம் விசாரிக்கிறான்
நானோ
அம்மா சிறுமியாக இருக்கும் போது
அடித்த புயல்பற்றிய கதையினை
ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இக்கவிதையின் இறுதி வரிகளுக்கு வந்து சேரும் போது புயல் ஒரு புன்னகையென இதழில் அடிக்கிறது.
இத்தகைய கதையம்சங்கள் கொண்ட கவிதைகளில் அவருடைய அவதானிப்புகள் வளர்ச்சியடைந்திருக்கிறது.
அரிக்கன்லாம்பு எனும் கவிதையும் இத்தகைய கதைத்தன்மை கொண்டது. அரிக்கன் லாம்புக்காலங்களைக் கடந்து விட்ட பின்னரும் அந்த வெளிச்சம் விரட்டாத இருள் இன்றும் எம்முடன் வாழ்கிறது என்று தொடங்கும் அந்தக் கவிதை
‘ இருளின்மேல் ஒளியாய்
எழுந்த லாம்பு
நம் வாழ்க்கைச்சுழற்சியின் சூரியன்’ என்று தன் கவித்துவ கணங்களைச் சென்று சேர்கிறது. அரிக்கன்லாம்பிலிருந்து எழும் ஒளியை சூரியனாகக் காணும் கண்களிற்கு கவிதை இன்னும் உதிக்கும்.
வெட்டியான் எனும் இன்னொரு கவிதையின் இறுதி வரிகளில்,
‘ கண் நனைத்தபடியே ஒருவருக்குச் சொன்னான்
என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட
நான் சவக்கிடங்கு தோண்டியிருக்கலாம்
ஒவ்வொரு புதைகுழிக்குள்ளும் என் ஆத்மாவையும்
கண்ணீரையும் அவர்களுக்குத் துணையாய்
போட்டு மூடிவிடுகின்றேன்’
இந்தக் கவிதை வரிகளுக்கு ஒருவர் சென்று சேர அதற்கான அனுபவம் வாய்க்க ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். நேதாவின் கண்கள் வாழ்வை உள்ளும் புறமும் பார்க்க ஆரம்பித்துவிட்ட மகிழ்ச்சியை இத் தொகுப்பு அளிக்கிறது. நமது சூழலில் கவனிக்கப்பட்டு உரையாடி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கவிதைக்குரலை அவர் கொண்டிருக்கிறார். இத் தொகுப்பில் உள்ள அரசியல் கவிதைகளும் கவனிக்கத்தக்கவை. குமுதினி மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் எழுதப்பட்டுள்ளவற்றில் உள்ளோடும் அவதானிப்புகளும் சித்தரிப்புகளும் முக்கியமானவை.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali January 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண அறிவித்தல்!
Next Article இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் யாழ்ப்பாணம் – கொழும்பு புகைரத பாதை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?