By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அறநெறி வகுப்புக்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துயைாடல்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > அறநெறி வகுப்புக்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துயைாடல்!
யாழ்ப்பாணம்

அறநெறி வகுப்புக்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துயைாடல்!

Last updated: 2023/07/24 at 10:00 PM
Published July 24, 2023 379 Views
Share
2 Min Read
SHARE

பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதில் மாணவர்களுக்கு அறநெறி வகுப்புக்களை கிரமமாக நடாத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் அனைவரும் பொறுப்பாக செயற்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

jaffna (5)
jaffna (10)
jaffna (9)
jaffna (8)
jaffna (7)
jaffna (6)

பிரதேச செயலக மட்டத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தி நடைபெற்றதாகவும்,
ஆலய நிர்வாகங்களுக்கு அறநெறி வகுப்புக்களை மேற்கொள்ளுதல் தொடர்பாக அறிவுறுத்தியதாகவும், சில ஆலயங்களில் அறநெறி வகுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு நடைபெறாத ஆலயங்களில் இதனை முன்னெடுப்பதாகவும் பிரதேச செயலாளர்களால் குறிப்பிடப்பட்டது.

அறநெறி வகுப்புக்களில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானதாகவும், அறநெறி வகுப்புக்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு உணவுகளை வழங்குதலில் சில இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன.

அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது பிரதேச செயலக மட்டத்தில் ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், சமயப் பண்புள்ள பொருத்தமான ஆசிரியர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கான வேதனத்தை வழங்குதல், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், மாணவர்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கலை மன்றங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் ஊடாக மாணவர்களை கலைசார் செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு பிரதேச மட்டத்தில் குழு வகுப்புக்கள், இணைய வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் நடைபெறும் இடங்களின் தரவுகள் மற்றும் பிரதேச மட்டத்தில் அறநெறி வகுப்புக்களை மேற்கொள்ளும் ஆலயங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தரவுகளையும் விரைவாக சேகரித்துத் தருமாறு குறிப்பிட்டார்.

பிரதேச மட்டத்தில் கலாசார நிகழ்வினை செய்தல், ஆலயங்களில் அறநெறி நிகழ்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் போட்டிகளை வைத்தல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது.

மாதாந்த பௌர்ணமி விழா கொண்டாடுதல் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் ஒவ்வொரு நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. முதலாவது பௌர்ணமி தின நிகழ்வு 01.08.2023 அன்று நடைபெறவுள்ளது.

கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் உங்கள் பணிகளை திறம்பட செய்தல் வேண்டும். சமூக ரீதியான வளர்ச்சிக்கு உங்களின் பணி மிக முக்கியமானது, கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் அறநெறி வகுப்புக்கள் மற்றும் கலைசார் நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் மூலம் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கமுடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

Anarkali July 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண விசாரணை அதிகாரி இன்மையால் நெடுந்தீவு மக்கள் சிரமம்!
Next Article அனலைதீவு 50 ஆவது இலக்கியச் சந்திப்பு எதிர்வரும் 29 ஆரம்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?