வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் நேற்று(மே 6) சென்றுள்ளனர்.
வவுனியா வடக்கு, ஒலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, நெடுங்கேணி பொலிஸார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தனர்.