யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.
நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளது.
இந்த ரயிலின் முதல் வகுப்புக்கான கட்டணம் 4 ஆயிரம் ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.