யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரியில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற கருத்தரங்கில் தொழிலதிபர்களில் ஒருவராகிய ராஜ் ராஜரத்தினம் சிறப்புரையாற்றினார்.
“தலை சிறந்த தொழில் முயற்சியாளராக ஒருவர் உருவாகிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றினார்.
பலரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தனிமனித ஆளுமைகள் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு நாட்டை கட்டி எழுப்ப முடியும் என்பன போன்ற விடயங்களைத் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.