வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (பெப். 20) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப்புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாணமாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்குறிப்பிட்ட அரச அதிபர் மாவட்டத்தில் புனரமைக்க வேண்டிய வீதிகளின்விபரங்களை துல்லியமான முறையில் தயாரித்து உரிய அமைச்சிற்கு வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், அதற்காக பிரதேச செயலக ரீதியாகபுனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்திஅதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களுடன் இணைந்து சரியான முறையில் தயாரித்து மாவட்டத்தின் மொத்ததேவைப்பாடுகளை தயாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள்தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இக் கலந்துரையாடலில் திட்டமிடல்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.