யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல்மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்குமாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமானநாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (மே30) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின்செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு உரையின்போது ,
மாவட்டச் செயலகத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா உள்ளடங்களாக 1113.78 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும்தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியானமுறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார். மேலும், சனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடவுச் சீட்டு அலுவலகத்தினைஆரம்பிப்பதற்கான வேலைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரைவழங்கியதற்கமைய விரைவில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள்நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி, வலையமைப்புவசதி மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் கொட்டகை போன்ற வேலைத்திட்டங்களே மீதம் உள்ளன எனவும் தெரிவித்தார்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில்,
சனாதிபதி அவர்கள் 09 மாகாண ஆளுநர்களுடான கலந்துரையாடலில்இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட மாகாணங்களுக்கு 03 மடங்கு நிதிஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைசரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும்கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில்,
அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்குஅதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்கள் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் பார்க்க கூடுதலான நிதி ஒதுக்கீட்டினைஅடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களைநடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு சவால்கள் பிரச்சனைகளைபொறுப்புவாய்ந்த திணைக்களங்கள் வினைத்திறனாக கையாண்டு, அபிவிருத்தித் திட்டங்களைவிரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுஅனைவருக்கும் உள்ளதாகவும், அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினையும்வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள்மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும்ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியைபெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதிவழங்கப்பட்டது. மேலும், மணல் அகழ்வு, தெல்லிப்பளை புற்றுநோய்வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ளசனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாணபிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேசசெயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதிபொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.