யாழ் மறைமாவட்ட எல்லைக்குள் கத்தோலிக்க மதம் சார்ந்து சொரூபங்கள், ஆலயங்கள் மற்றும் நினைவுத்தூபிகள் அமைப்பதாயின் ஆயர் இல்ல அனுமதி பெற்ப்படவேண்டும் என்று யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மறைமாவட்ட ஆயருடன் இணைந்த குருக்கள் மன்ற கூட்டம் கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் யாழ் மறைமாவட்ட எல்லைக்குள் திருச்சொரூபங்கள் ஆலயங்கள் மற்றும் நினைவுத் தூபிகள் அமைப்பதாக இருந்தால் யாழ். ஆயர் இல்லத்திற்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் யாழ் ஆயர் இல்ல காணி அலுவலகம் ஊடாக எழுத்து மூல அனுமதி பெற்ற பின்பே கட்டுமாணப் பணிகளை ஆரம்பிக்க முடியுமெனவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.