By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் நடைபெறவுள்ள திருமந்திர ஆன்மீக மாநாடு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் நடைபெறவுள்ள திருமந்திர ஆன்மீக மாநாடு!
யாழ்ப்பாணம்

யாழில் நடைபெறவுள்ள திருமந்திர ஆன்மீக மாநாடு!

Last updated: 2023/10/22 at 9:36 AM
Published October 22, 2023 405 Views
Share
2 Min Read
SHARE

திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகாசபையின் பொதுச்செயலாளர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (ஒக்ரோபர் 21) யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,அகில இலங்கை சைவமகாசபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை இணைந்து ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டிற்காக 50 திருமந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் அறநெறி மாணவர்களிடையே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சைவத்தமிழர்களது வாழ்வியலுடன் இணைந்ததாக திருமந்திரம் காணப்படுகின்றது.ஆகவே திருமந்திரம் அடுத்த சந்ததிக்கு கடத்தபடவேண்டும்.

இதனை மையமாக கொண்டு வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் மாணவர்களிடையே நிகழ்நிலைரீதியாக திருமந்திர போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

இதே வேளை எதிர்வரும் வாரத்தினை திருமந்திர வாரமாகவும் அகில இலங்கை சைவமகாசபை மற்றும் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்ததுறை பிரகடனப்படுத்தியுள்ளது.இந்த வாரத்தில் திருமூலரது திருமந்திரத்தினை அறிதல் பிறருக்கு தெளிவூட்டுதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கபடவேண்டும்.

எந்தவொரு விடயமும் முன்னெடுக்கப்படவேண்டுமாயின் கல்வி சமூகம் கை கொடுக்க வேண்டும் அதனடிப்படையில் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை , பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட யாழ் பல்கலைக்கழகம் அது உருவாக்கப்பட்டதன் நோக்கினை இந்த திருமந்திர மாநாட்டின் மூலம் தொடர்ச்சியான ஒரு நிலையை பேசுகின்றது. இதற்காக பல்கலைக்கழகத்திற்கும் சைவமகா சபை நன்றியை தெரிவிக்கின்றது.

மேலும் வடக்கு கிழக்கு மலையகம் தழுவியரீதியில் பல சைவ நிறுவனங்கள் இதற்கான ஆன்மீக விழிப்புணர்வு மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியுள்ளன.சாதாரண கிராமம் முதல் அனைத்து இடங்களிலும் இந்த திருமந்திர மாநாடு சென்றடைய வேண்டும். குறித்த மாநாட்டில் திருமந்திர மாநாட்டு மலர் ஒன்று வெளியீடு செய்துவைக்கபடவுள்ளது.

இந்தியாவிலிருந்து ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி அருணை பாலறாவாயனும் இதற்காக கலந்துகொள்ளவுள்ளார்.காலை மற்றும் மாலை என இருபகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மநாட்டில் வருகை தருபவர்களுக்கும் மதிய போசனம் தயார்படுத்தபட்டுள்ளது.குறித்த முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக சிவசிறீ சரவேஸ்வர ஐயர் பத்மநாதன் இந்து கற்கைகள் பீட பீடாதிபதி யாழ் பல்கலைக்கழககம்,செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன்,திருமிகு கிருஷ்ணபிள்ளை குணநாயகம் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர்,கௌரவ விருந்தினர்களாக கலாநிதி சுகத்தினி திரு முரளிதரன் இந்து நாகரீகதுறை தலைவர் யாழ் பல்கலைக்கழககம்,திருமிகு நாகையா வாமன் தலைவர் இந்து நாகரீகதுறை கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்,தென்கையிலை ஆதீனம் ,மெய்கண்டார் ஆதீனம்,தருமை ஆதீன கிளைமடம் திருக்கேதீச்சரம், திருநாவுக்கரசர் ஆதீனம் நுவரெலியா,சிவகுரு ஆதினம் நல்லூர் ஆகியவற்றின் குரு முதல்வரும் பங்குபற்றவுள்ளனர்.

ஆகவே குறித்த மாநாட்டிற்காக அனைத்து தரப்புக்களும் எம்முடன் இணைந்து பணியாற்றி திருமந்திரத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

Anarkali October 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மரண அறிவித்தல்
Next Article காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தவுள்ள இஸ்ரேல் இராணுவம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?