2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (ஜனவரி 05) முதல் ஆரம்பிக்கவுள்ளன.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.