வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 2) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இந்நிலையில், விசாரணையின்போது அவர்கள் தொலைபேசிகளை திருடியதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நேற்றுமுன்தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.