யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்புக்கான டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த பௌத்த துறவி ஒருவர், பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாளின் முதல் அமர்வின் போது, சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்பவர், உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக்கான கற்கைநெறியை முடித்து, வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.
இவரது பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அவர்களால், பாரம்பரிய முறையில் வழங்கப்பட்டது.