செம்மணியில் நிறைவடைந்தது 3 ஆம் கட்ட அகழ்வுப் பணி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56 ஆவது நாளான இன்று (19/08) இறுதிநாளுக்கான அகழ்வு பணிகள் நடைபெற்றன.

செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment