யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரன் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்றுதீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை15) அதிகாலை அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டார் உறக்கத்தில்இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிசென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.