By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறுநீரக நோயாளர்களின் மரணம் தொடர்பில் வௌியான தகவல்
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சிறுநீரக நோயாளர்களின் மரணம் தொடர்பில் வௌியான தகவல்
இலங்கைச் செய்தி

சிறுநீரக நோயாளர்களின் மரணம் தொடர்பில் வௌியான தகவல்

Last updated: 2024/02/26 at 7:39 PM
Published February 26, 2024 256 Views
Share
1 Min Read
SHARE

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர் திடீரென உயிரிழந்தமைக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்ட இரசாயனத்தின் தாக்கமே காரணமாக இருக்கலாம் என என வைத்தியசாலையின் வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளர்கள் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு கடந்த 23ஆம் திகதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதற்கான காரணத்தை கண்டறிய சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அதற்கமைவாக இரத்த மாற்றம் மற்றும் இரத்தம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற இரு வைத்தியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால நடவடிக்கை எடுத்துள்ளார். .

இதுதவிர குருநாகல் போதனா வைத்தியசாலையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ள நோயாளர்களை குளியாப்பிட்டிய, நாரம்மல, தம்பதெனிய, நிகவெரட்டிய மற்றும் நிக்கவெவ வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் அனைவரும் இரத்தமாற்ற சிகிச்சையின் போது உடலில் உள்ள இரத்த பிளேட்லெட் அளவு வேகமாகக் குறைந்த பின்னர் சிக்கல்கள் காரணமாக இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவவிடம் வினவியபோது, ​​நோயாளிகள் உயிரிழந்தமைக்கான எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, சிகிச்சை பெற்று வந்த ஏனைய நோயாளிகளின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை (26 பெப்ரவரி) குருநாகலுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஆபத்துக்கு கொண்டு செல்லும் அறுவை சிகிச்சைகள்!
Next Article தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகனும் இறந்த சோகம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?