வடக்கில் சிறந்த நீச்சலுக்கான கடற்கரையாக பரிசீலிக்கப்படும் வேலணை சாட்டி கடற்கரை இப்பொழுது நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
அந்த அடையாளமான கடற்கரையை, மக்கள் குவிந்து மகிழ்வதைத் திருப்தியுடன் அனுபவிக்கக் கூடிய உல்லாசப் பிரதேசமாக மாற்ற, வசதிகள் மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் அவசியம் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா துறையை மேம்படுத்தி சாட்டி கடற்கரைக்காக 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் , இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.