ஓமந்தை விபத்தில் உயிரிழந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகன்அக்ஷய் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிர்பிரிந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சற்று முன்னர் (ஜூன்01) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன்நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.
விபத்தில் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சஜ்யிதானந்தபிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவிபி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார்சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே மகன் பி.அக்ஸய் (வயது 27) சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.