கோப்பாய் – இருபாலை உள்ள இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி ஒருவர்நின்றுகொண்டிருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையில் யுவதியிடம் இருந்து ஐஸ் போதைபொருள்கைப்பற்றப்பட்டுள்ளதுடன்
சந்தேக நபரான யுவதி திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும்பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரைஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்றுஉத்தரவிட்டுள்ளது.